அத்திக்காய் பயன்கள்

Spread the love

அத்திமரத்தில் இவ்வளவு நன்மைகளா?

அத்திக்காய் பயன்கள்
அத்திக்காய்-அத்திமரம்-fig tree

அத்திக்காய் பயன்கள்

தமிழ் பெயர்            : அத்தி 

ஆங்கிலப்பெயர்    : FIG TREE

அறிவியல் பெயர்   : Ficus carica

நாம் யாரையாவது வெகுநாட்களாக காணாமல் கண்டால் அத்தி பூத்தது போல என்று சொல்வதுண்டு. இதை எதற்க்காக சொல்கின்றார்கள் என்றால் இவ்வுலகில் அனைத்து தாவரங்களும் பூப்பூத்து காய் காய்க்கும்.

ஆனால் ஒரு சில தாவரங்கள் மட்டும் பூ பூக்காமலேயே காய்க்கக்கூடியது. அதில் ஒரு வகைதான் அத்திமரம்.

அத்திக்காய் பயன்கள் :

சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிடும் காலத்தில் சாப்பிடக்கூடிய பத்தியக்கறி வகைகளுடன் அத்திக்காய் முக்கியமானது என்பதிலிருந்தே இதன் மருத்துவ சிறப்பை உணரலாம்.

அத்திக்காய் என்று நாம் சொன்னாலும் அத்தியின் பிஞ்சையே நாம் பயன்படுத்த வேண்டும்.

அத்திப்பிஞ்சை நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தலாம். காய் துவர்ப்பு சுவை கொண்டது. இதன் பழம் இனிப்பு சுவை கொண்டது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க – Urai Marunthu:

ஆனால் பழத்தின் உள்ளே சிறுசிறு பூச்சிகளும், வண்டுகளும் இருக்கும். அதனால் பார்த்துதான் சாப்பிட வேண்டும்.

அத்தியின் பிஞ்சை சமையலில் கூட்டாகவோ, பொரியலாகவோ பயன்படுத்திவர பெண்களுக்கு உண்டாகும் நாள்பட்ட வெள்ளை நோய், உடல் வெப்பம், வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்புண் போன்றவை குணமாகும். மலசிக்கல் நீங்கும்.

மேலும் சில பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு அதிகமாக இருக்கும். சிலருக்கு மாதவிடாய் ஒழுங்காக இருக்கும். ஆனால் இரத்தப்போக்கு அதிகமாகி தொல்லை தரும்.

ஒரு சிலருக்கு மாதவிடாய் ஒழுங்காக இருக்காது. வரவேண்டிய நாளுக்கு மிகவும் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வந்து நீண்டநாள் உதிரப்போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இந்தமாதிரி மாதவிடாய் தொந்தரவு, பெரும்பாடு உள்ளோர்களுக்கு அத்திக்காய் சிறந்த வரப்பிரசாதம்.

அவர்கள் அந்தமாதிரி உதிரப்போக்கு நாட்களில் நிற்கும் வரை தினசரி அத்திப்பிஞ்சை சமையல் செய்து சாப்பிட்டுவர பெரும்பாடு நோய் அறவே குணமாகி நாளடைவில் மாதவிடாய் இயல்பான நிலைக்கு வரும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் வரும். இது ஒரு தொல்லையாகவே இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல்வறட்சி, உடல் அசதி, களைப்பு, நாவறட்சி ஏற்படும்.

வேறு சிலர்க்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் உடல் பலவீனம், நரம்பு தளர்ச்சி, சுரப்பிகள் கோளாறு போன்ற காரணங்களினாலும் சிறுநீர் அடிக்கடி வெளியேறும்.

இவ்வகை நோயாளிகளுக்கு அத்திக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவர்கள் வழக்கமான மருத்துவத்துடன் அத்திப்பிஞ்சை தினமும் உணவுடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டுவர குணம் அடையும்.

இரத்தபேதி, இரத்த மூலம் உள்ளவர்களுக்கும், இரத்த சோகை உள்ளவர்களும் இதனை உணவுடன் பயன்படுத்திவர நல்ல பலன் காணலாம்.

அத்தி பிஞ்சு, மாங்கொட்டைப் பருப்பு சமஅளவு எடுத்து சிறிது நீர்விட்டு அரைத்து விழுதாக்கி சிறிய நெல்லிக்காய் அளவு தினசரி மூன்று வேளை தயிரில் சாப்பிட்டுவர எந்தவகை பேதியும் நிற்கும்.

அத்திப்பட்டை அதாவது அத்திமரத்தின் அடிப்பாகத்தில் இருந்து மேற்புறமாக செதுக்கி எடுக்கப்பட்ட பட்டையை நன்கு இடித்து நீர்விட்டு ஊறவைத்து வடிகட்டி காய்ச்சி குடிநீராய்க்கி 100மில்லிலிட்டர் வீதம் தினம் மூன்று வேளைகள் குடிக்க மேற்ச்சொன்ன பெண்களுக்கான பெரும்பாடு மற்றும் நாள்பட்ட வெள்ளை நோய்கள் சரியாகும்.


Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *